News September 26, 2025
அறந்தாங்கி: விஷம் அருந்தி பெண் தற்கொலை

அறந்தாங்கி அடுத்த மேலபட்டுவை சேர்ந்தவர் நித்தியா(28). இவருக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆன நிலையில் இரண்டு வருடத்திற்கு முன் அவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக நேற்று மேலபட்டில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது தந்தை பாஸ்கர் (55) அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 26, 2025
புதுக்கோட்டை: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News September 26, 2025
புதுகை: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டா? Call Now

புதுக்கோட்டடை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 26, 2025
புதுக்கோட்டை: பாலியல் தொல்லை, 22 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மதி(44). இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மதியை திருமயம் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் நேற்று வழக்கை விசாரித்து மதிக்கு சட்டப் பிரிவுகளில் மொத்தம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.