News April 13, 2024
விடுபட்டவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் உரிமைத் தொகை

தகுதி இருந்தும் விடுபட்ட மகளிருக்கு அடுத்த 4 அல்லது 5 மாதங்களில், உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் என உதயநிதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில குறைகள் இருப்பது உண்மைதான் எனக் கூறினார். மேலும், விடுபட்டவர்களை கண்டறிந்து, தேர்தலுக்குப் பிறகு அவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
Similar News
News July 11, 2025
₹189-க்கு புதிய பிளானை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.
News July 11, 2025
கோலிவுட்டில் ஜாதி இல்லையா? கலையரசன் பரபரப்பு Statement!

தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமாக இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என கலையரசன் கூறியுள்ளது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். பல முற்போக்கு கருத்துக்களை பேசி பாடம் எடுக்கும் கோலிவுட்டிலும் இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News July 11, 2025
மாலை 5 மணிக்கு.. சபரிமலை பக்தர்களின் கவனத்திற்கு

தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதன் அடிப்படையில் சபரிமலையின் மாளிகப்புரத்தம்மன் கோயிலில் நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதன் பிரதிஷ்டைக்காக, இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை திறக்கப்படும்.