News September 26, 2025
திருப்பூரில் அதிர வைக்கும் ஆன்லைன் மோசடி!

திருப்பூர், ராயபுரத்தை சேர்ந்தவர், 60 வயது மூதாட்டி. சமூக வலைதள விளம்பரத்தை நம்பி செயலியில் பணம் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என பல்வேறு தவணையாக, 9 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். பின், பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும் பணத்தை கட்ட கூறினர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடி நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 6, 2025
திருப்பூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News November 6, 2025
திருப்பூர்: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 6, 2025
திருப்பூர்: ரேஷன் கார்டில் பிரச்சனையா?

திருப்பூர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி ரேஷன் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்று, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு பதிவு செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.


