News April 13, 2024

திருவள்ளூர்: குவிக்கப்பட்ட துணை ராணுவத்தினர்

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய பாதுகாப்பு படை போலீசார், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதன்படி செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்திரவின் பேரில் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் மீஞ்சூர் அரியன் வாயல், பஜார் வீதியில் அணிவகுத்து சென்றனர்.

Similar News

News November 18, 2025

SIR. படிவங்களை நிரப்ப உதவி மையங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அவரவர் வாக்குசாவடியில் SIR., படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் முகாம் வரும் நவ. 19, 20 ஆகிய நாட்களில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவி தேர்வு

image

தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டியில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குயிக் ஸ்பேரோ வில்வித்தை பயிற்சி மையத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி தவ்ஷிகா தஸ்னீம்(14) பெண் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து இவர் டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள 21 வயதிற்கு உட்பட்ட இந்திய ஜூனியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News November 18, 2025

திருவள்ளூருக்கு பெருமை சேர்த்த பாலபுரம் ஊராட்சி

image

மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 6வது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய அளவில் நீர் மேலாண்மையில் 3வது இடம் கிடைத்தது. இதற்கான விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்பிடம் வழங்கினார்.

error: Content is protected !!