News September 26, 2025
கரூரை டார்கெட் செய்யும் அரசியல் தலைவர்கள்

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருந்தாலும் பரப்புரை இப்போதே சூடுபிடித்துள்ளது. இப்போதைக்கு தமிழக அரசியல் தலைவர்களின் கவனம் முழுக்க கரூரை சுற்றி தான் உள்ளது. ஏனென்றால் இன்று EPS பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், நாளை விஜய்யும், நாளை மறுநாள் அன்புமணியும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கரூரில் நடைபெற்றது.
Similar News
News September 26, 2025
அரசு நிகழ்ச்சியா? பாடல் வெளியீட்டு விழாவா?

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற அரசு நிகழ்ச்சி பாடல் வெளியீட்டு விழா போல இருந்தது என சீமான் விமர்சித்துள்ளார். 2,500 பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடத்துவதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பட்டப்படிப்பு முடித்து வரும் இளைஞர்களுக்கு தாய் மொழியில் எழுதத் தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 26, 2025
இப்போதான் 4G’யே வரீங்களா.. BSNL மீது கடும் விமர்சனம்!

நாளை முதல் இந்தியா முழுவதும் 4G சேவையை வழங்கவுள்ளதாக BSNL அறிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற டெலிகாம் நெட்வொர்க்குகள் விரைவில் 6G கொண்டுவந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘நீங்க ரொம்ப Slow BSNL’ என பயனர்களிடம் இருந்து கடும் விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News September 26, 2025
EPS பிரசாரம் செய்த இடத்தில் விஜய்க்கு அனுமதி

நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். ஆனால், கரூரில் பரப்புரை செய்வதற்கு இதுவரை அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதனால் கோர்ட்டை நாட தவெக திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் நேற்று EPS-ம் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.