News September 26, 2025
தென்காசி மாவட்ட ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

இன்று (25.09.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலக சமூக ஊடகத்தின் வாயிலாக பகிரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இரவு நேர காவல் உதவி தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News September 26, 2025
வனத்துறை சார்பில் இயற்கை முன்னோடி விருதுகள்

தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பு செய்த 100 நபர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள்” என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெற விரும்பும் தனி நபரோ அல்லது வேறு நபர் மூலம் பரிந்துரை செய்தோ வனத்துறை இணையதள முகவரி (https://www.forests.tn.gov.in/) /நேரடிடையாகவோ உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இணைத்து விண்ணப்பிக்கலாம்.
News September 25, 2025
வேளாண் வணிக திருவிழாவில் கலந்து கொள்ளலாம் – ஆட்சியர்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 27.09.2025 அன்று காலை 10:30 மணியளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழாவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதால் விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் வணிகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தகவல்.
News September 25, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி மாவட்டத்தில் 2025 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8834 ஹெக்டர், சிறுதானியங்கள் 4365 ஹெக்டர். பயறு வகைகள் 530 ஹெக்டேர் பருத்தி 592, கரும்பு 662 ஹெக்டர், எண்ணெய் வித்து 1044 ஹெக்டேர். பழங்கள் 9716 ஹெக்டேர், காய்கறிகள் 2582 ஹெக்டேர். வாசனைப் பயிர்கள் 497 ஹெக்டேர், மலைப்பயிர்கள் 13794 ஹெக்டேர். பூக்கள் 461 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.