News April 13, 2024
மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறையில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 17 அன்று காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி முழுவதும் டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவினை மீறி செயல்படும் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் கவனத்திற்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சந்தேகம் மற்றும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட தொகுதி கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1950, சீர்காழி தனி சட்டமன்ற தொகுதி 04364270222, மயிலாடுதுறை 04364222033, பூம்புகார் தொகுதி 04364289439 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்த எம்.எல்.ஏ

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.


