News September 25, 2025

பரமக்குடியில் வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை புறக்கணித்தும்
மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்ப்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News September 26, 2025

ராமநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்ட விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் இன்று (செப். 26) இராமநாதபுரம் நகராட்சி – வி.எஸ்.மஹால், மண்டபம் வட்டாரம் – பஞ்சாயத்து அலுவலகம், பாம்பன், பரமக்குடி வட்டாரம் – ஊராட்சி அலுவலக கட்டிடம், மொசுக்குடி, ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.

News September 25, 2025

ராமநாதபுரம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (செப். 25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News September 25, 2025

ராம்நாடு: 600 மது பாட்டில்கள் திருட்டு., 5 பேர் கைது

image

திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு டாஸ்மாக் கடையில் செப். 20ல் அதிகாலை பூட்டை உடைத்து 600 மது பாட்டில்கள் திருடுபோயின. ராமநாதபுரம் எஸ்பி அறிவுறுத்தல்படி, எஸ்ஐ சிவசாமி தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடினர். தீவிர தேடுதலுக்கு பின் சித்தார்கோட்டை அசோக் குமார், ராமநாதபுரம் தங்கபாண்டி, புதூர் நிஷாந்த், விருதுநகர் கே.ஆலங்குளம் முனியரசு, முத்துப்பேட்டை மோகன்ராஜ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்

error: Content is protected !!