News September 25, 2025
நாட்டை விட மோடியின் நலன் முக்கியமா? சோனியா காந்தி

பாலஸ்தீன விவகாரத்தில் மோடி அரசின் ஆழ்ந்த மௌனம், மனிதநேயத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவின் நலன்களுக்காக இல்லாமல், மோடி – நெதன்யாகுவின் தனிப்பட்ட நட்புக்காக, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் நீதி, அடையாளம், மனித உரிமைகளுக்காக போராடும் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 25, 2025
நாம் தனியாக இல்லை.. ஏலியன்ஸ் இருக்கலாம்

பிரபஞ்சத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் இருப்பதால், வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு தற்போதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இருப்பினும் சில விவரிக்க முடியாத நிகழ்வுகளால், சந்தேகம் எழுந்துள்ளது. எதன்மூலம் இந்த சந்தேகம் என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. ஏலியன்ஸ் இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க
News September 25, 2025
₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாம். 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன., முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News September 25, 2025
விண்வெளியில் விளைக்கப்பட்ட முதல் காய்கறி எது தெரியுமா?

உருளைக்கிழங்கு தான் விண்வெளியில் விளைக்கப்பட்ட முதல் காய்கறி. விண்வெளியில் உணவு பொருட்களை விளைவிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் நாசாவும் விஸ்கான்சின் பல்கலையும் இணைந்து செயல்பட்டன. இதற்காக 1995-ல் கொலம்பிய விண்கலத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு விளைந்த உருளைக்கிழங்கை வீரர்கள் உண்ணவில்லை. ஆய்வு செய்வதற்காக அவை பூமிக்கு கொண்டுவரப்பட்டன. இந்த தகவலை SHARE பண்ணுங்க.