News April 13, 2024
கோட்டை கோயில் பெருமாள் சுவாமி சிறப்பு பூஜை

வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News April 30, 2025
வேலூரில் விசிக பிரமுகர் வெட்டி படுகொலை

வேலூர் அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரத்குமார் (32). இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளராக உள்ளார்.
News April 30, 2025
அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) வேலூரில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். முடியாதவர்கள் கல் உப்பு வாங்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் சிறப்பு. ஷேர் பண்ணுங்க
News April 30, 2025
காட்பாடிக்கு ரயிலில் வந்த 1,358 டன் யூரியா

மும்பையில் இருந்து சரக்கு ரயில் மூலம் நேற்று காட்பாடிக்கு 1,358 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் வந்தது. இவை வேளாண் கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முருகன் முன்னிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களுக்கு லாரி மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.