News September 25, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. போலீஸை சாடும் அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் CBI விசாரணையை வரவேற்றுள்ள அவர், இந்த கொலையின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படுவதை CBI உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், TN அரசு CBI விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 25, 2025
விரைவில் 3,227 ஆசிரியர்கள் நியமனம்: அன்பில்

டெட் தேர்வு குறித்த தீர்ப்பை நினைத்து ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம், நான் இருக்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 2021 முதல் 8,388 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 3,227 ஆசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எங்கும் ஆசிரியர் இல்லாத வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
BREAKING: பள்ளி வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் மாணவன்

நெல்லை, வள்ளியூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் அமர்வது தொடர்பாக இரண்டு மாணவர்களிடையே பிரச்னை இருந்த நிலையில், ஒரு மாணவன் தான் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சற்றுமுன் கொடூரமாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மாணவன் தனியார் ஹாஸ்பிடலில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 25, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற வசதியின் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.