News September 25, 2025

முப்படைகளின் தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்பு

image

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2026 மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பின், 2022 செப்டம்பரில் அனில் சவுகான் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

Similar News

News September 25, 2025

காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்?

image

காலையில் எழுந்ததும் 30 நிமிடங்களுக்குள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பென்சில்வேனியா மாகாண பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கேன்சர் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள், ரத்த கொதிப்பு, இதய நோய்கள், நீரிழிவு பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இளைஞர்களை அதிகம் பாதிக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News September 25, 2025

‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறா?

image

‘மெய்யழகன்’படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், படம் வெளியான சமயத்தில் பல எதிர்மறை விமர்சனங்களும் வந்தன. இந்நிலையில், ‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறு என பலர் கூறியதாக இயக்குநர் பிரேம் குமார் கூறி இருக்கிறார். மெய்யழகனை மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள் என தன்னிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மெய்யழகன் படம் பிடிக்குமா?

News September 25, 2025

தமிழகத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

image

வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. முக்கியமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!