News September 25, 2025
கோவை: ஆறு பேர் அதிரடி கைது!

கோவை சிங்காநல்லூர் – இருகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சூர்யா நகர் பகுதியில், தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்து ரயிலுக்கு சேதம் ஏற்படுத்த முயன்றதாக, ரயில்வே பாதுகாப்புபடை போலீசார், வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த தினேஷ், வேதவன், நாகராஜ், வினோத், கோகுல் கிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 25, 2025
ஸ்மார்ட் போன் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

கோவை மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன் டெக்னீஷியன் மற்றும் செயலி பயிற்சியாளர் பிரிவில் ஒரு காலியிடம் உள்ளது. SSLC அல்லது சமமான தகுதி, மின்னணுவியல் டிப்ளமோ அவசியம். விண்ணப்பங்கள் செப்.,30 மாலை 5.30க்கு முன், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், ஜி.என். மில்ஸ் அஞ்சல், கோவை என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்
News September 25, 2025
கோவை: டிகிரி முடித்தால் கனரா வங்கியில் வேலை!

கோவை மக்களே.., உங்கள் ஊர் கனரா வங்கியில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு முழுவதும் சுமார் 394 அப்பரெண்டிஸ் பதவிகளின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 25, 2025
கோவை: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!