News September 24, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, 6 மாதத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தவும், செம்பியம் காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை எனவும் உடனடியாக அனைத்து ஆவணங்களையும் சிபிஐக்கு ஒப்படைக்கவும் உத்தரவு வழங்கப்பட்டது.
Similar News
News September 25, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (24.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 25, 2025
ரவி மோகன் வீட்டில் நோட்டிஸ் ஒட்டிய அதிகாரிகள்

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் இன்று (செப்.24) வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டிஸ் ஒட்டினர். அதில், EMI சரியாக செலுத்தாத காரணத்தினால் நோட்டிஸ் ஒட்டப்படுகிறது. ரூ.7.60 கோடி கோடி கடன் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி ஆர்த்தியுடன் ரவி மோகன் இங்கு வாழ்ந்து வந்தார். தற்போது இருவரும் பிரிந்துள்ளதால் EMI செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
News September 25, 2025
இத்தனை ஆண்டு சுமையாக இருந்தது: சீமான்

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று (செப்.24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கு பயன் தரும் என்றார் வரியை விதித்தது ஏன்? 2017-ல் விதித்த வரி இத்தனை ஆண்டு மக்களுக்கு சுமையாக இருந்தது. இது கூட தெரியாமல் என்ன ஆட்சி செய்கிறார்கள். இந்த நாட்டில் பிறந்ததை தவிர்த்து வேறு என்ன பிழை செய்தோம்” என்றார்.