News September 24, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் வடக்கு-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (12512) மீண்டும் வழக்கமான பாதையிலேயே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் அக்.05- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு வழியாக இயக்கப்படும் இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

பயணியர் நிழற்கூடம்: திறந்து வைத்த மெக்கானிக்!

image

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அழகாபுரம் காவல் நிலையம் அருகே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பேருந்து பயணிகளுக்கான நிழல் கூடம், இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள், அப்பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவரை வைத்து, பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்தார். எம்எல்ஏவின் இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டினர்.

News November 10, 2025

ஏற்காட்டில் தங்கும் விடுதியில் விபரீத முடிவு!

image

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகேஷ் குமார் (21). இவர் நேற்று ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை என ஊழியர்கள் சென்று பார்த்த போது, விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

சேலம்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். இதற்காக, <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம வாய்ப்பு மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!