News April 13, 2024
காவலர்கள் வாக்கு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்துவதற்கான அவகாசம் நாளை(14.4.24) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் 19 ஆயிரம் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், 3 இடங்களில் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றோடு முடிந்த நிலையில் மேலும், தேவைப்பட்டால் கால அவசாகம் நீட்டிக்கப்படும் என்றார்.
Similar News
News February 1, 2026
சென்னை தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
சென்னையில் பாலியல் தொழில்- 2 பேர் கைது

சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு-1 குழுவினர், நேற்று பெரியமேடு, வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது, ஒரு அறையில் பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. பெண் காவலர்கள் உடன் நடத்திய சோதனையில், அப்துல்கரீம் (35, அசாம்) மற்றும் பரசுராம் பெஹேரா (42, ஒடிசா) கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண் மீட்கப்பட்டார்.
News February 1, 2026
சென்னை: துரத்தி துரத்தி கடித்து குதறிய நாய்

சென்னை அம்பத்தூர் திருவேங்கட நகர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (60) என்பவர் வீட்டருகே உள்ள பூங்கா–வில் நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று திடீரென துரத்தி துரத்தி பாய்ந்து அவரது கையை கடித்துக் குதறியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அது வளர்ப்பு நாய் என தெரியவந்தது.


