News April 13, 2024

மதுரை: ரயிலில் சிக்கிய தம்பதி படுகாயம்

image

உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை(35), மனைவி ஜெயலட்சுமி(28).
நேற்று நாகர்கோவில் செல்வதற்காக திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவை – நாகர்கோவில் ரயிலில் ஜெயலட்சுமி ஏறியபோது ரயில் கிளம்பியது. இதனால் ரயிலில் சிக்கி அவரது இரு கால்களும் துண்டாகின. காப்பாற்ற முயன்ற சிங்கதுரையின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Similar News

News December 7, 2025

மதுரை: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News December 7, 2025

மேலூரில் மதுக் கடத்திய போலீஸ்காரர் கைது

image

மதுரை மாவட்டம் மேலூரில் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன், ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மது பாட்டில்கள் கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ்காரர் பாண்டி குமார் என்பவரை கைது செய்து மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News December 7, 2025

மதுரையில் ரூ.36,680 கோடி முதலீடு: 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு

image

மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,680 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

error: Content is protected !!