News April 13, 2024
பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்த சோகம்

கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத்துறையினர், வீடு ஒன்றில் பாம்பு நுழைந்திருப்பதாக கிடைத்த தகவலில் சென்று பாம்பு பிடித்துள்ளனர். அதனை பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவில் அடைக்க முற்பட்டார். அப்போது பிடிபட்ட பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 19, 2025
கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர் உட்பட சென்னை, நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில், 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் (ஆகஸ்ட் 18) அறிவுறுத்தியுள்ளது.
News August 19, 2025
கடலூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்.2 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவோ, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!!
News August 19, 2025
கடலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (18/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதனை ஷேர் செய்யுங்கள்!