News September 24, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் மரக்கன்றுகள்!

தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க நாளில், நாவல் மரத்தினை கொண்டாடுவோம் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதான அருகில், 200 மேற்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீ கட்ட முடியுமா விளையாட்டு விடுதி மாணவிகள், கேந்திர வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உஷார்.. மழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் மக்களே இன்று (செப்.24) இரவு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மேலும், இன்று இரவு பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே…வங்கியில் வேலை! APPLY NOW

பெரம்பலூர் மக்களே! கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள்<
News September 24, 2025
பெரம்பலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் செப்.26ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.