News September 24, 2025

மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

image

தரகர்கள் எல்லாம் தலைவர்களாகி விட்டதால் நாட்டில் இஷ்டத்திற்கு வரி விதிக்கப்படுவதாக சீமான் சாடியுள்ளார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களின் சுமை குறையும் என்கிறார்கள். ஆனால் தொடக்கத்தில் இந்த வரியை விதித்தது யார்? ஜிஎஸ்டி வரி மக்களுக்கு சுமையாக இருந்ததை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியென்றால் மத்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 24, 2025

ஒருக்கா மட்டும் அண்ணன் பேச்ச கேளு: சீமான்

image

விஜய்யை எதிர்த்து போட்டியிடவா நான் அரசியல் செய்கிறேன் என்ற சீமான், இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு என விஜய்க்கு அறிவுறுத்திய சீமான், உனக்கு தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்றார். மேலும், திடீரென மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி விஜய் பேசுவது, மோடி தமிழில் திருக்குறள் சொல்வதுபோல உள்ளது என்றும் கடுமையாக சாடினார்.

News September 24, 2025

அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. கில், அபிஷேக் சர்மா இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. முதல் 3 ஓவர்களுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த இந்தியா, அடுத்த 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது. தனது அதிரடியான ஆட்டத்தால் அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி (60 ரன்கள்) களத்தில் உள்ளார். கில், (29 ரன்கள்), ஷிவம் துபே (2 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

News September 24, 2025

ரத்த சோகை நீங்க இதை சாப்பிடுங்க

image

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் 1 சாப்பிட்டு வந்தால் பல உடல்நல பிரச்னைகள் தீரும். உடலில் ரத்தம் தூய்மை அடைவதுடன் ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும் என்றும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் பிரச்னைகள் குணமாகும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வெள்ளைப்படுதலுக்கு தீர்வு காண பெண்கள் இதை சாப்பிடலாம். SHARE IT.

error: Content is protected !!