News September 24, 2025
ஆம்லேட் சாப்பிட்டவர் உயிரிழப்பு… சோகம்!

உணவை அவசர அவரசமாக விழுங்க கூடாது, நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதற்கு கேரளாவில் நடந்த இச்சம்பவம் ஒரு உதாரணம். விஷாந்தி டி’சோசா என்பவர் சாலையோர கடையில் ஆம்லெட், வாழைப்பழம் வாங்கி அவற்றை வேகவேகமாக விழுங்கியுள்ளார். உணவு தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதால், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். சாப்பிடும் போது அவசரப்பட வேண்டாம். இந்த பயனுள்ள எச்சரிக்கையை நண்பர்களுக்கு SHARE செய்யலாமே!
Similar News
News September 24, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். பலம் வாய்ந்த இந்தியாவை வங்கதேசம் வீழ்த்துவது கடினமான காரியமே. Head to Head = 17 போட்டிகள், வெற்றி = 16 இந்தியா, 1 வங்கதேசம்.
News September 24, 2025
TTV-யை சந்திக்கவில்லை என செங்கோட்டையன் மறுப்பு

TTV தினகரனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனியார் TV-க்கு தொலைபேசி வாயிலாக பேசிய அவர், சொந்த வேலையாக சென்னை வந்ததாகவும், தான் யாரையும் சந்திக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனவும், இணைந்து 2026 தேர்தலை சந்தித்தால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்பது தனது விருப்பம் எனவும் கூறியுள்ளார்.
News September 24, 2025
CBSE பொதுத்தேர்வு தேதி வெளியானது

10, 12-ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்.17-ல் தொடங்கி ஜூலை 15-ல் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை, இந்தியா உள்பட 26 நாடுகளில் இருந்து 45 லட்சம் மாணவர்கள் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தேர்வும் நடந்த 12-வது நாளில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்.