News September 24, 2025
தஞ்சையில் நகை மதிப்பீடு பட்டய பயிற்சி!

தஞ்சை சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான நகை மதிப்பீடும், அதன் நுட்பங்கள் குறித்து பட்டயப் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.4.2025 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கூட்டுறவு சங்கங்களின் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் கூறி உள்ளார். SHARE NOW
Similar News
News September 25, 2025
தஞ்சாவூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News September 25, 2025
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு நிவாரண தொகை வரவு வைப்பு

2024-25 ஆம் ஆண்டு மே மாதம் பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட 455 ஏக்கர் பரப்பிற்கு ரூ.28 லட்சம் நிவாரண தொகையும், செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 2,996 ஏக்கர் பரப்பிற்கு ரூ.157 லட்சம் நிவாரண தொகை,பெங்கல் மழையால் பாதிக்கப்பட்ட 2,325 ஏக்கர் பரப்பிற்கு ரூ.160 லட்சம் நிவாரண தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிவிப்பு.
News September 25, 2025
குறுவை சாகுபடி 1 லட்சம் ஏக்கர் மேல் அறுவடை என ஆட்சியர் அறிவிப்பு

2025-26 ஆம் ஆண்டு 1,97,100 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு
1,00,270 ஏக்கர் பரப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா/தாளடி பருவத்தில் 21,980 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 346 மெட்ரிக் டன்னும் தனியார் விற்பனை நிலையங்களில் 1980 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது. என ஆட்சியர் தெரிவித்தார்.