News September 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹40 குறைந்து ₹10,600-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹84,800-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2 நாளாக காலை, மாலை என இருமுறை விலை உயர்ந்த நிலையில், இன்று மாலை விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News September 24, 2025
இந்த தலைமுறையா நீங்கள்?

ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து 10 பெண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்த தலைமுறை நம் குடும்பத்திலேயே இருந்திருக்கலாம். இந்த பூர்வீக நிலத்தை வைத்தே வீடு கட்டி, திருமணம் செய்வது என தலைமுறைகள் மாறிக் கொண்டே வந்தது. ஆனால் தற்போதோ, சம்பாதிப்பதை கொண்டு அன்றாட வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே பெரும்பாலானோர் இருப்பதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News September 24, 2025
திருமண மோசடி: மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சம்மன்

திருமண மோசடி புகாரில் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு நேரில் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிவிட்டு, தற்போது ஏமாற்றுவதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், வரும் 26-ம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் நீலாங்கரை காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 24, 2025
BREAKING: உளுந்து, பச்சை பயிறு ஆதரவு விலை உயர்வு

உளுந்து, பச்சை பயிறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சைப் பயறு ₹87.68, ஒரு குவிண்டால் ₹8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உளுந்து ஒரு கிலோ ₹78, ஒரு குவிண்டால் ₹7,800 என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பல லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.