News September 24, 2025
நெல்லை: நெட்டீசன்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
நெல்லை கவின் கொலை வழக்கில் புதிய தகவல்

நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. காதலை கைவிட கூறி சுர்ஜித் உறவினர் ஜெயபால் கவினை தனியே அழைத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. கவினை கயத்தாறு பகுதிக்கு வரவழைத்து காதலை கைவிடுமாறு மிரட்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. கவின் கொலையில் சுர்ஜித்தின் தாயாருக்கு தொடர்பு உள்ளதா என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
News September 24, 2025
சந்திப்பு பேருந்து நிலையத்தில் திருட்டு கும்பல் கைது

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் அடிக்கடி செல்போன் பர்ஸ் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 4 பேர் பஸ் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் மணி பர்ஸ் போன்றவற்றை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த நான்கு பேரை இன்று போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 24, 2025
நெல்லை தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க கடைசி நாள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகள் 2026ம் ஆண்டிற்கான உரிமத்தை புதுப்பிக்க அக்.31 கடைசி நாள். https://dish.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றி, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். உரிம புதுப்பித்தல், திருத்தம், மாற்றம் ஆகியவை ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும். அலுவலகம் வர தேவையில்லை என நெல்லை தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்.