News September 24, 2025
நாடு முழுவதும் எதிரொலித்த விலை குறைப்பு

GST வரி குறைப்பு எதிரொலியாக நாடு முழுவதும் செப்.22ம் தேதி ஒரே நாளில் மாருதி சுசுகி 32,000 கார்களையும், ஹூண்டாய் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்குவதால், இன்னும் பைக், கார்களின் விற்பனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News September 24, 2025
மக்கள் நன்மையடைவதை CM விரும்பவில்லை: தமிழிசை

மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்க காசு இல்லை, ஆனால் பேனாவுக்கு சிலை வைக்க காசு இருக்கிறதா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், GST வரி குறைப்பை பாராட்ட CM ஸ்டாலினுக்கு மனமில்லை என சாடினார். மக்களுக்கு நல்லது நடப்பதை CM ஸ்டாலின் விரும்பவில்லை என கூறிய அவர் மக்கள் சார்ந்து செயல்படவும் வலியுறுத்தியுள்ளார்.
News September 24, 2025
தாமதமான நீதியின் கொடுமை..

1986-ல் ம.பி., EB Bill Assistant ஜகேஷ்வர் ₹100 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 2004-ல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க, விசாரணையில் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் உறுதியாகாததால், 38 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த செப். 9-ம் தேதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவரின் வாழ்க்கை ஓடிவிட்டது. தாமதமான நீதி எவ்வளவு கொடுமையானது!
News September 24, 2025
வான் படையின் சீனியர் வீரனுக்கு ஓய்வு

6 தசாப்தங்களாக இந்திய விமானப்படையில் பணியாற்றிய MiG-21 ரக சூப்பர் சோனிக் போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள பிரியாவிடை நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ஏபி சிங் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ரஷ்ய தயாரிப்பான MiG-21 கடந்த 1963-ல் படையில் சேர்க்கப்பட்டது. 1965 முதல் இந்தியாவின் அனைத்து போர்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன.