News September 24, 2025

கள்ளக்குறிச்சி: மின் ஊழியர்கள் 164 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணாநகர் நேற்று செப்டம்பர் 24 மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. பொது மக்களுக்கு இடையூறாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் 164 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News September 24, 2025

கள்ளக்குறிச்சியில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

image

கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய பாண்டியன், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், 17 வயது சிறுவனை விழுப்புரம் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

News September 24, 2025

கள்ளக்குறிச்சி: மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <>இணையதளத்தின் மூலம்<<>> உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

image

அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,

செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,

பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,

மகரூர் கைலாசநாதர் கோயில்.

தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.

ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.

இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!