News September 24, 2025
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்வு!

வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் மாற்றம் (பெயர், முகவரி) செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் ₹50-ல் இருந்து ₹75-ஆக உயர்த்தப்படுகிறது. அதே போல, Biometric மாற்றம் செய்ய, கட்டணம் ₹100-ல் இருந்து ₹125-க்கு உயர்த்தப்படுகிறது. ஆனால், புது ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இது முதல்கட்ட விலை ஏற்றம் என்றும், செப்டம்பர் 30, 2038 வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Sensex 372 புள்ளிகள் சரிந்து 81,729 ஆகவும், நிஃப்டி 110 புள்ளிகள் சரிந்து 25,061 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. அதானி பவர், டாடா மோட்டார்ஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. அதேநேரம் JSW, சிட்டி யூனியன் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
News September 24, 2025
மன்னிப்பு கேளுங்க! சீமான், விஜயலட்சுமிக்கு SC எச்சரிக்கை

தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, இவ்விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துக்கொண்டு செல்வது. இருவரும் குழந்தைகள் அல்ல; ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வரவழைக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.
News September 24, 2025
விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது: திருமாவளவன்

திமுக அரசுக்கு எதிரான கருத்துகளை விஜய் வெறுப்பு அரசியலாக முன்வைக்கிறார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது என்றும் பரப்புரைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விஜய்க்கு புதிதாக தெரியலாம், ஆனால் அவை எல்லோருக்கும் இருப்பவை தான் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈழப் பிரச்னை உச்சத்தில் இருந்த காலத்தில் விஜய் வாய் திறந்து பேசியதாக தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.