News September 24, 2025

சேலம் மக்களுக்கு அவசர எண்கள் அறிவிப்பு!

image

சேலம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் “1077” என்ற எண்ணிலோ, கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.120-ல் செயல்பட்டுவரும் கட்டுப் பாட்டு அறையை 0427-2452202 என்ற எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். மக்களே, SHARE பண்ணுங்க!

Similar News

News November 10, 2025

பயணியர் நிழற்கூடம்: திறந்து வைத்த மெக்கானிக்!

image

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அழகாபுரம் காவல் நிலையம் அருகே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பேருந்து பயணிகளுக்கான நிழல் கூடம், இன்று மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள், அப்பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவரை வைத்து, பேருந்து நிழற் கூடத்தை திறந்து வைத்தார். எம்எல்ஏவின் இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டினர்.

News November 10, 2025

ஏற்காட்டில் தங்கும் விடுதியில் விபரீத முடிவு!

image

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகேஷ் குமார் (21). இவர் நேற்று ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை என ஊழியர்கள் சென்று பார்த்த போது, விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

சேலம்: ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். இதற்காக, <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம வாய்ப்பு மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!