News September 24, 2025
குமரியில் ஓய்வுபெற்ற ஆசிரியையையிடம் ரூ. 4.20 லட்சம் மோசடி

தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் மேரிலீலா (65), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் ஒரு சொத்தை விலைக்கு வாங்கினார். அப்போது இடைதரகராக செயல்பட்ட விஜயகுமார் என்பவர் சொத்தின் விலையை விடஅதிகமாகரூ.4.20 லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த மேரிலீலா அந்த பணத்தை விஜயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இது பற்றி தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்
Similar News
News September 24, 2025
குமரியில் பட்டாசு கடை உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 10.10.2025-ந்தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம். கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம். போன்ற விபரங்களை இணைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 24, 2025
குமரி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

குமரி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 24, 2025
குமரி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி!

குமரி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <