News September 24, 2025
சருமத்தை பராமரிக்க இந்த 3 மட்டும் போதும்!

நம் உடலில் உள்ள தோலைவிட, முகத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையானதாக இருக்கும். சரும பராமரிப்பு பொருள்களை அதிகம் பயன்படுத்தினால் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சருமம் பராமரிக்க இந்த 3 விஷயங்களை செய்தால் போதும். அதவாது, * மென்மையான கிலென்சர் (முகத்தை சுத்தப்படுத்த உதவும்), *மாய்ஸ்டரைசர் (முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்), *சன்ஸ்கிரீன் (குறைந்தபட்சம் எஸ்பிஎஃப் 30 சன்ஸ்கிரீன் போதுமானது).
Similar News
News September 24, 2025
ஏழுமலையான் தரிசனத்திற்கு இதுதான் சரியான நேரம்!

திருப்பதியில் கடந்த வாரம் பக்தர்களின் கூட்டம் அலைமோதி, தரிசனத்திற்கு 12- 14 மணி – நேரம் வரை ஆன நிலையில், தற்போது கூட்டம் குறைந்துள்ளது. புரட்டாசி மாத பிரம்மோற்சவ சேவை இன்று தொடங்கும் நிலையில், கூட்டம் குறைந்துள்ளது. இதனால், இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் காத்திருக்காமல் நேரடியாக அனுமதிக்கப்படுகின்றனர். பிரம்மோற்சவ சேவை தொடங்குவதால், பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 24, 2025
மூலிகை: நந்தியாவட்டையில் இவ்வளவு நன்மைகளா..

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி ➣நந்தியாவட்டை பூக்களை தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால், கண் பிரச்னைகள் நீங்கும் ➣இலைகளின் சாறு காயத்தின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும் ➣நந்தியாவட்டையின் வேர் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் ➣கல்லீரல் & மண்ணீரல் வியாதிகளுக்கு நந்தியாவட்டையின் வேர் தோல் மிகுந்த பயன்களை அளிக்கக் கூடியது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 24, 2025
நாடு முழுவதும் எதிரொலித்த விலை குறைப்பு

GST வரி குறைப்பு எதிரொலியாக நாடு முழுவதும் செப்.22ம் தேதி ஒரே நாளில் மாருதி சுசுகி 32,000 கார்களையும், ஹூண்டாய் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்குவதால், இன்னும் பைக், கார்களின் விற்பனை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.