News April 13, 2024
தபால் வாக்குகளை பகிா்ந்தவர்கள் மீது வழக்கு

தேனி மக்களவை தொகுதியில் சிலமலையை சோ்ந்தவர் விக்கிதேவன், குமணன்தொழுவை சோ்ந்த சிவமாயன் ஆகியோா் தங்களது தபால் வாக்கைப் பதிவு செய்து வெற்றி வாக்கு என்று தலைப்பிட்டு தங்களது முகநூல் பக்கத்தில் பகிா்ந்துள்ளனா்.இவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் மாவட்டக் காவல் துறை நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது நேற்று வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
தேனி: கல்வி உதவி தொகை வேண்டுமா.. க்ளிக் செய்ங்க

தேனி கோட்ட தபால்துறை சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தபால்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருத்தல் அவசியம். விண்ணப்பம், விவரங்களுக்கு<
News August 20, 2025
தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஆக.22 அன்று காலை காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9894889794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
தேனி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தேனி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9894854837 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!