News April 13, 2024

துரை வைகோ மீது வழக்குப் பதிவு

image

தேர்தல் விதிகளை மீறியதாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி இ.பி.சாலையில் விதிகளை மீறி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் துரை வைகோ, மனோகர் உள்ளிட்டோர் மீதும் நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய புகாரில் பாஜக பிரமுகர் மருது பாண்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

SIR விவகாரம்: பார்லி.,யில் விவாதத்திற்கு வருகிறது

image

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து மக்களவையில் நாளை விவாதம் தொடங்கவுள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

News December 8, 2025

பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

image

பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், நடிகையின் கார் டிரைவர் சுனில் உள்பட குற்றம்சாட்டப்பட்ட A1- A6 ஆகியோர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 8, 2025

விஜய்யின் புதிய முயற்சி இதுவா?

image

தவெக கூட்டத்துக்காக புதுச்சேரி உப்பளத்தில் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 3 கூடுதல் நுழைவாயில்கள், தண்ணீர், நாற்காலிகள், லைட் என அனைத்தும் போடப்படும் நிலையில், ஸ்டேஜ் மட்டும் அமைக்கப்படாது என தகவல் கசிந்துள்ளது. ஏன்? கூட்டத்தில் விஜய் பேசமாட்டாரா? என கேட்க வேண்டாம். ஏனென்றால், இம்முறை விஜய் பஸ்சில் இருந்தபடியே கூட்டத்தில் பேச முடிவெடித்திருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!