News April 13, 2024

துரை வைகோ மீது வழக்குப் பதிவு

image

தேர்தல் விதிகளை மீறியதாக மதிமுக வேட்பாளர் துரை வைகோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி இ.பி.சாலையில் விதிகளை மீறி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் துரை வைகோ, மனோகர் உள்ளிட்டோர் மீதும் நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய புகாரில் பாஜக பிரமுகர் மருது பாண்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 27, 2025

இந்தியா – பாக். வர்த்தகம் : கோவைக்கு பாதிப்பா?

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாக். மீது பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், கோவை, திருப்பூரில் தொழில்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆயத்த ஆடை தயாரிப்பில் பாக். நமக்கு போட்டி நாடே தவிர, இதனால் பாதிப்பில்லை என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். மேலும், இதனால் எல்லைப் பகுதியில் மட்டுமே பிரச்னை என்றும், உக்ரைன், ரஷ்யா போரிலும் நமக்கு பின்னடைவும் இல்லை என்றனர்.

News April 27, 2025

தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி : PM மோடி

image

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என PM மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் எனக் கூறினார். முழு உலகமும் நம்முடன் நிற்கிறது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.

News April 27, 2025

நீட் தேர்வு மோசடி புகாரளிக்க இணையதளம் தொடக்கம்

image

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி புகார்களை அளிக்க புதிய இணையதளங்களை தேசிய தேர்வு முகமை (NTA) தொடங்கியுள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள NTA, ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!