News September 23, 2025
திமுகவை காப்பாற்றியது ஜெயலலிதா: EPS

திமுகவில் இருந்து பிரிந்தவர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்ற நினைத்த போது, அதை காப்பாற்றியது ஜெயலலிதா என EPS தெரிவித்துள்ளார். திமுகவினர் இதை மறந்துவிட வேண்டாம் எனவும், அதிமுகவின் அலுவலகம் அமித்ஷா வீட்டில் இல்லை, சென்னையில் தான் இருக்கிறது என்பதை கனிமொழி வந்து பார்க்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அதிமுகவை முடக்க திமுக செய்த அத்தனை சதிகளும் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
சருமத்தை பராமரிக்க இந்த 3 மட்டும் போதும்!

நம் உடலில் உள்ள தோலைவிட, முகத்தில் உள்ள தோல் மிகவும் மென்மையானதாக இருக்கும். சரும பராமரிப்பு பொருள்களை அதிகம் பயன்படுத்தினால் அது பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சருமம் பராமரிக்க இந்த 3 விஷயங்களை செய்தால் போதும். அதவாது, * மென்மையான கிலென்சர் (முகத்தை சுத்தப்படுத்த உதவும்), *மாய்ஸ்டரைசர் (முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்), *சன்ஸ்கிரீன் (குறைந்தபட்சம் எஸ்பிஎஃப் 30 சன்ஸ்கிரீன் போதுமானது).
News September 24, 2025
சூடுபிடித்துள்ள கார் விற்பனை

GST வரி குறைப்பால் 1500CC-க்கும் குறைவான கார்களின் விலை ஒரு லட்சம் வரை குறைந்துள்ளது. இதனால் கார் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வரி குறைப்பு அமலான 22-ம் தேதி மட்டும் டாடா மோட்டர்ஸ் 10,000 கார்களையும், மாருதி சுசுகி 30,000 கார்களையும், ஹுண்டாய் 11,000 விற்று தள்ளியுள்ளது. அதேபோல் கார்களை வாங்க விசாரிப்பவர்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
News September 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 468
▶குறள்: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
▶பொருள்: எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.