News September 23, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.23] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
Similar News
News September 24, 2025
நெல்லை காசு மாற்று தரத்தில் பின்னடைவு

இந்திய அளவில் காற்று மாசு குறைவாக உள்ள சிறந்த நகரங்களில் நெல்லை முக்கிய இடம் பிடித்திருந்தது. காற்று மாசு தரம் 46 என்ற சிறந்த குறியீட்டு எண் நிலையில் இருந்து. தற்போது 60 ஆக பதிவாகியுள்ளது. இது சிறிய பின்னடைவாக கருதப்படுகிறது. ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்தால் ஏற்படும் புகை மண்டலம், மற்றும் பாதாள சாக்கடை குழி தோண்டுவதால் சாலைகளில் பறக்கும் தூசி காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
News September 24, 2025
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர் குறைகள் ஏதும் இருந்தால் கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம்.
News September 24, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.23] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்ணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.