News September 23, 2025

12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைவதை தவிர்க்க, வெளியே செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.

Similar News

News September 23, 2025

நீங்கள் சரியாக தூங்குகிறீர்களா?

image

உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசியம். எப்போதாவது ஒருமுறை தூக்கத்தை மிஸ் செய்தால் பரவாயில்லை. ஆனால், தொடர்ந்து 3 நாள்கள் சரியாக தூங்கவில்லை எனில் இதயம் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சரியாக தூங்காதவர்கள் உடலில் அழற்சியை உண்டாக்கும் புரதங்கள் அதிகமாகும் அதேநேரம், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதாம். இளைஞர்களையும் இது பாதிக்குமாம். நீங்க எப்படி?

News September 23, 2025

சபரிமலையில் TN-க்கு நிலம்.. பழனியில் கேரளாவிற்கு நிலம்!

image

தமிழர்களுக்கு வசதி ஏற்படுத்தி தர, சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதற்கு பழனியில் இடம் கொடுத்தால், சபரிமலையில் கொடுப்பதாக கேரள அரசு கூறியதாகவும், இதற்கு தமிழக அரசும் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கண்ணகி கோயில் கட்டவும், கோயிலுக்கு செல்லும் வழிப்பாதையை செப்பனிட அனுமதிக்க வேண்டும் என கேரள அரசிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

பண மழை கொட்ட போகும் 5 ராசிகள்

image

அக்.18-ம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவதால் பின்வரும் ராசியினர் நன்மைகள் பெறுவர்: *மிதுனம்: பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் எச்சரிக்கை தேவை *கன்னி: சொத்து, வருமானம் பெற வாய்ப்பு, முதலீடு பலன் தரும் *விருச்சிகம்: நீண்ட காத்திருப்புக்கு பலன் கிடைக்கும், லாபம் அதிகரிக்கும் *மகரம்: பணம் சம்பாதிக்க சூழ்நிலை சாதகமாகும் *மீனம்: நீண்டகால சிக்கல்கள் தீரும், வெற்றி கிடைக்கும்.

error: Content is protected !!