News September 23, 2025
குமரி மக்களே உஷார்; ரூ1.62 கோடி மோசடி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்த ரம்யா, அவரது கணவர் சுரேஷ் மற்றும் அனுசியா ஆகிய 3 பேரை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. *விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர் செய்யுங்கள்.
Similar News
News September 23, 2025
நெல் கொள்முதல் குடோனில் கலெக்டர் ஆய்வு செய்தார்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று நாகர்கோவில் அருகே உள்ள குருந்தன்கோடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது போதிய அளவு இருப்பு உள்ளதா பாதுகாக்கப்பட்டு வரும் நெல்களின் தரம் சிறந்ததாக உள்ளதா மேலும் ஸ்டாக் வைக் போதிய இருப்பிட வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
News September 23, 2025
தவறான செய்தி என காவல்துறை விளக்கம்

கேரள மாநிலம் பொழியூர் கடற்கரையில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், வீடியோ எடுத்து மிரட்டியதாக குமரி காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்தாக யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. கேரளாவில் நடந்த இந்த சம்பவத்திற்கும் குமரி காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
News September 23, 2025
குமரி: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

குமரி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த லிங்கில் <