News September 23, 2025

கிருஷ்ணகிரி: 45 நிமிடங்களில் பிடிப்பட்ட திருடன்

image

கிருஷ்ணகிரியில் இன்று பட்டப்பகலில் கலைச்செல்வி என்பவரிடம் சங்கிலி பறிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியை 45 நிமிடங்களில் அடையாளம் கண்டு கைது செய்தனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த ஜெகதீஸ்வர சுதர்சன குமார் என்பது தெரியவந்துள்ளது.

Similar News

News September 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 23, 2025

கிருஷ்ணகிரி: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

image

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இதற்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>> செய்து செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 22) 115.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், போச்சம்பள்ளியில் அதிகபட்சமாக 38 மி.மீ மழையும், நெடுங்கல்லில் 26 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, பெனுகொண்டாபுரம் மற்றும் பர்கூர் பகுதிகளிலும் முறையே 20 மி.மீ மற்றும் 18 மி.மீ மழை பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

error: Content is protected !!