News September 23, 2025
தி.மலை: மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு

தி.மலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Similar News
News September 23, 2025
தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (23.09.2025) திருவண்ணாமலை மாநகராட்சி, காஞ்சி சாலையில் விஜயபாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News September 23, 2025
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவின் எம்பிக்களுக்கு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதியில் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் தங்க வேண்டும் மாவட்ட நிர்வாகிகளோடு ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும், 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆரணி எம்பி தரணிவேந்தன் கலந்து கொண்டார்.
News September 23, 2025
தி.மலை: மின்சாரம் பாய்ந்து பலி

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் துணை மின் நிலைய ஊழியர் பிரபாகரன், புதுப்பாளையம் கிராமத்தில் புதிய மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்கம்பம் எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இன்று(செப்.23) உயிரிழந்தார். கண்ணமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.