News September 23, 2025
காஞ்சிபுரம்: வறுமை நீங்க இங்கு போங்க!

பல்லவ தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள பழங்காலக் கோயில்களில் ஒன்றான யதோத்காரி பெருமாள் கோயில் கி.பி 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். கருவறையில், தலைமை தெய்வமான யதோத்கரி, புஜங்க சயனத்தில் உள்ள பாம்பு மஞ்சத்தில் மேற்கு நோக்கி சாய்ந்துள்ளார். வறுமையில் தவிப்பவர்கள் இங்கு வந்து வேண்டினால் மாற்றங்கள் கிடைக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை. வறுமை நிலை மாற நினைப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 23, 2025
காஞ்சிபுரம்: டிஎஸ்பி கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்ட விவகாரத்தில், நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அறிக்கையை ஐகோர்ட் நிர்வாக குழுவுக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக கைது உத்தரவை ரத்து செய்து, விஜிலென்ஸ் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
காஞ்சி: 12th போதும், அரசு வேலைகள்!

காஞ்சி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – செப். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு <
News September 23, 2025
காஞ்சி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ (அ) தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!