News September 23, 2025

கடலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.9.2025 அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News September 23, 2025

கடலூர் மக்களே.. இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு!

image

கடலூர் மக்களே.. மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கு கிளி<<>>க் செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் LIKE செய்து SHARE பண்ணுங்க!

News September 23, 2025

கடலூர்: ஏலச்சீட்டில் ரூ.33 லட்சம் மோசடி செய்த பெண்

image

புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி ருக்குமணி (57). இவர் கடலூர் உழவர் சந்தையில் வைத்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இந்நிலையில் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்காமல் ரூ.33,32,000 மோசடி செய்து விட்டார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மோசடியில் ஈடுபட்ட ருக்குமணியை நேற்று கைது செய்தனர்.

News September 23, 2025

கடலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!