News September 23, 2025
புதுவை: இறைச்சி கடைகளை மூட உத்தரவு

புதுவை நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தியில் காந்தி ஜெயந்தி விழா அடுத்த மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு அங்காடிகளில் ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களும், மீன் கடைகளும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Computer Operator & Programming Assistant, Sewing Technology, Data Entry Operator, Cosmetology ஆகிய 1 வருட பயிற்சி பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே மாணவிகள் தகுந்த சான்றிதழ்களுடன் பயிற்சி நிலையத்தை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த எலெக்ட்ரீசியன் ஜெகன்(40) பெரியபாளையத்து
அம்மன் கோவில் கொலு விழாவுக்கு கோபுரத்தின் மீது ஏறி ஸ்பீக்கர்செட் கட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருந்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 23, 2025
புதுச்சேரி: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <