News September 23, 2025
மயிலாடுதுறை: வங்கி வாசலில் பைக் திருட்டு

மயிலாடுதுறை மகாராஜபுரம் ஆனந்தகுடியை சேர்ந்த கோமளவல்லி என்பவர் கூறைநாடு பகுதியில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மொபட்டை திருடிய பிரித்விராஜ் (19), பரசுராமன் (21), சாரதி (20) மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News September 23, 2025
மயிலாடுதுறை: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து தீண்டாமை நடைபெறாமல் தடுப்பதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News September 23, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி திருமஞ்சன வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதை ஆய்வு செய்து முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். மேலும் இதில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் பங்கேற்றனர்.
News September 23, 2025
மயிலாடுதுறை: குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 265 மனுக்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை புரிந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் மனுக்களை கலெக்டர் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.