News April 13, 2024
லாரி மோதி குழந்தை உயிரிழப்பு

தஞ்சை, கபிஸ்தலம் அருகே பூதங்குடியில் ஐயப்பன்- காசியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களது ஒன்றரை வயது குழந்தை ராஜஸ்ரீ வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த லாரி குழந்தை மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜஸ்ரீ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார், லாரி ஓட்டுநர் பிரசாத் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News December 9, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.08) இரவு 10 மணி முதல் இன்று (டிச.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 9, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.08) இரவு 10 மணி முதல் இன்று (டிச.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 8, 2025
தஞ்சை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு தஞ்சை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!


