News September 23, 2025
இந்திய அணியிலிருந்து விலகிய ஷ்ரேயஸ்!

இந்திய A அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார். இன்று தொடங்கும், ஆஸ்திரேலிய A அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அவர் அணியிலிருந்தும் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணத்தினால் விலகியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
தவெக தனித்து ஆட்சி அமைக்கும்: அருண்ராஜ்

தவெக 30% வாக்கு வங்கியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு வருவது பணம் கொடுப்பதால் வரும் கூட்டம். ஆனால், விஜய்க்கு வருவது தன்னெழுச்சியான கூட்டம் எனக் கூறிய அவர், தற்போது எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகள் தவெகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
News September 23, 2025
விலை குறையலையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

நாடு முழுவதும் GST வரி சீர்த்திருத்தம் அமலுக்கு வந்துள்ளதால் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை என்றால் உங்களால் புகாரளிக்க முடியும். 1800-11-4000 (அ) https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக புகாரளிக்கலாம். முதல்நாளிலேயே 100 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 23, 2025
ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்: EPS உறுதி

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், குன்னூரில் EPS பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது குன்னூருக்காக திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என குற்றம்சாட்டிய அவர், அதிமுகவின் திட்டங்களை பெயர் மாற்றி திமுக புகழ் தேடிக்கொள்கிறது என பேசினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் உள்ள வீடில்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் எனவும் உறுதியளித்தார்.