News September 23, 2025
குமரி: குளத்தில் இறங்கி தேங்காய் எடுத்தவர் புதரில் சிக்கி உயிரிழப்பு

சித்திரங்கோடு ராஜாங்கம் (32) நேற்று குலசேகரம் தாழபிடாகையில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது தேங்காய் குளத்தில் விழுந்துள்ளது. குளத்தில் இறங்கி தேங்காய்களை எடுத்து விட்டு கரைக்கு திரும்ப முயன்ற போது அவர் பாசி, புதர் செடிகளுக்கு இடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். தீயணைப்பு துறையினர் அங்குச் சென்று குளத்தில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ராஜாங்கத்தின் உடலை மீட்டனர்.
Similar News
News September 23, 2025
குமரி: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வெள்ளாங்கோடு பகுதி தொழிலாளியான அனில்குமார்(56) முதல் மனைவி இறந்ததால் 2.வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். அனில் குமாருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்ததால் மனைவி இவரை விட்டுப்பிரிந்து சென்று விட்டார். நேற்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளோர் அருமனை போலீசுக்குதகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அழுகிய நிலையில் இருந்த அனில்குமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
News September 23, 2025
குமரி: மண்வெட்டியால் மகனை வெட்டிய தந்தை

உண்ணாமலைக்கடை மாரிமுத்து (83), மகன் ராஜேஷ் (39). கொத்தனாரான ராஜேஷ் அடிக்கடி மது குடித்து வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபடுவார். செப்.21-ம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ் மாரி முத்துவை தாக்க, ஆத்திரமடைந்த மாரிமுத்து மண்வெட்டியால் ராஜேஷின் கழுத்தில் வெட்டியுள்ளார். ராஜேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News September 23, 2025
குமரி: இலவச வீட்டு மனை வேண்டுமா?

குமரி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.