News April 13, 2024

ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்

image

ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால், மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த, குடும்பம் ஒன்றுக்கு தலா ₹5000 வழங்கப்படும். இந்த நிதி விரைவில் மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

Similar News

News November 8, 2025

தினமும் இந்த பழங்களை சாப்பிடலாம்

image

இந்தப் பழங்கள் வெறும் சுவையானவை மட்டுமல்ல, உங்கள் உடல் விரும்பும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. என்னென்ன பழங்கள், நம் அன்றாட ஆரோக்கியத்தில் பங்களிக்கின்றன என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE பண்ணுங்க. இவை தகவலுக்காக மட்டுமே. ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகவும்.

News November 8, 2025

BREAKING: துரைமுருகன் விலகலா..?

image

திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது விலகலுக்கு பிறகு ஜெகத்ரட்சகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, மேலும் 2 பேரை துணை பொதுச்செயலாளராக்கவும் திமுக திட்டமிட்டு வருகிறதாம்.

News November 8, 2025

அதிரடி வீராங்கனை ரிச்சா கோஷுக்கு DSP பதவி

image

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவருக்கு, அம்மாநில CM மம்தா பானர்ஜி தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கா பூஷன் என்ற மாநில அரசின் உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அதேபோல் அவருக்கு டிஎஸ்பி பதவியும் வழங்கப்பட்டது. ஏற்கெனவே தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவியை UP அரசு வழங்கியிருந்தது.

error: Content is protected !!