News September 23, 2025
கடலூர்: ஆளுநருக்கு தவாக தலைவர் கண்டனம்

தவாக தலைவர் மற்றும் எம்எல்ஏ-வுமான வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகம் என்றாலே கல்வி, அறிவு, திறமை என்று நாடு முழுவதும் பெருமையாகப் பேசப்படும் ஒன்று. அந்தக் கல்வித்தரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, தமிழகத்தில் தரமான கல்வி இல்லை என கூறியுள்ள ஆளுநரின் கருத்து, மாணவர்களின் உழைப்பையும், தமிழகம் கட்டியெழுப்பிய கல்வி மரபையும் அவமதிப்பதாகவும், அதனை கண்டிக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார் அவர்.
Similar News
News November 8, 2025
கம்மாபுரம்: மாணவி பட்டாசு பாம்பு மாத்திரை தின்று தற்கொலை

கம்மாபுரம் அடுத்த பெரியகோட்டிமூளையை சேர்ந்தவர் வீரப்பன் மகள் சகானா (17). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் வருடம் படித்து வரும் சஹானா வீட்டு வேலை செய்யாததால் அவரது தாய் சுபிகா கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சஹானா தீபாவளி பட்டாசு பாம்பு மாத்திரை சாப்பிட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 7, 2025
கடலூரில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

கடலூரில் நவம்பர் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (8.11.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
கடலூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT


