News September 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 467
▶குறள்: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
▶பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
Similar News
News September 23, 2025
BREAKING: நள்ளிரவில் கிளம்பிய செங்கோட்டையன்

OPS, TTV ஆதரவாளர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை செய்த செங்கோட்டையன், நள்ளிரவு 12 மணியளவில் சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். நீலகிரியில் இன்று நடக்கும் பரப்புரையில் பங்கேற்க, சேலத்தில் இருந்து கார் மூலம் கோபி, சத்தியமங்கலம் வழியாக இபிஎஸ் செல்கிறார். கோபி பஸ் ஸ்டாண்டில் காலை 7 மணிக்கு அவரை அதிமுகவினர் வரவேற்கின்றனர். இதை தவிர்க்கவே செங்கோட்டையன் சென்னைக்கு கிளம்பியதாக கூறப்படுகிறது.
News September 23, 2025
மூட்டுவலியை விரட்டும் இந்த யோகாசனம் பண்ணுங்க!

மூட்டுவலி நீங்கவும், கால் தசைகள் வலுப்பெறவும் தினமும் வீராசனம் செய்து வாருங்கள் *முட்டி வரை காலை மடக்கி, கணுக்கால் தரையில் இருக்கும்படி அமரவும் *நெஞ்சுக்கு நேராக, கைகளை கூப்பி (படத்தில் உள்ளது போல) அமரவும் *இந்தநிலையில், மூச்சை மெதுவாக நன்கு இழுத்து, வெளியே விடவும் *இப்படி 1 முதல் 2 நிமிடங்கள் வரை செய்வதன் மூலம் உடல் நடுக்கம் நீங்கும். இத்தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.
News September 23, 2025
துரைமுருகன் சொத்துக் குவிப்பு வழக்கு: இடைக்கால தடை

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை வேலூர் கோர்ட் விடுவித்திருந்தது. மேல்முறையீட்டில் வேலூர் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்த சென்னை HC, வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து துரைமுருகன் தரப்பு SC-க்கு சென்ற நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.