News September 22, 2025
5 மனைவிகள், 12 குழந்தைகள் உடன் வாழ்ந்த MR ராதா

ஆரம்பத்தில் நாடக கம்பெனியில் உடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்த MR ராதாவுக்கு ஒரு மகன் பிறந்தார். பின்னர், மனைவி, மகன் இருவரும் அம்மை நோயால் இறந்தனர். இதனையடுத்து, சரஸ்வதி, தனலட்சுமி என்ற சகோதரிகள் மற்றும் ஜெயம்மாள் ஆகியோரை வெவ்வேறு ஊர்களுக்கு சென்றபோது திருமணம் செய்துகொண்ட நடிகவேளுக்கு மொத்தம் 12 குழந்தைகள். கடைசியாக திருமணம் செய்த கீதா ராதாவின் குழந்தைகளே ராதிகா, நிரோஷா.
Similar News
News September 23, 2025
இரவா? பகலா?

நார்வே நாட்டில் உள்ள சோமரோய் என்னும் சிறிய தீவில் ஒவ்வொரு கோடை காலங்களில் 69 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை (Midnight Sun). குளிர் காலத்தில் சூரியன் உதிப்பதில்லை (Polar Night). இந்த ஊரில் கடிகாரம் இல்லை. இங்கு வாழும் மக்களுக்கு நேரம் ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு இந்த தீவில் வாழ ஆசையா இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 23, 2025
ரசிகர்களின் காத்திருப்பை அதிகரித்த சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில், ‘கருப்பு’ படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், இந்த ஆண்டு வர வாய்ப்பில்லை. அடுத்தாண்டு பொங்கலுக்கு ஏற்கெனவே ‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் சூர்யாவின் கருப்பு படம் 2026 ஏப்ரலில்தான் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News September 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 467
▶குறள்: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
▶பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.