News September 22, 2025

தொடரும் போதை மாத்திரை பறிமுதல்: இருவர் கைது

image

அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் செப்டம்பர் 22ஆம் தேதி அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயிலில் சென்னையை சேர்ந்த அப்துல் ரஷீத், மஸ்தான் ஆகிய இருவரும் 550 போதை மாத்திரைகள் கடத்தி வருவது தெரிந்து கைது செய்தனர். நேற்று ஐந்து பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 23, 2025

ராணிப்பேட்டை: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News September 23, 2025

ராணிப்பேட்டை: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

image

ராணிப்பேட்டையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>> மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News September 23, 2025

ராணிபேட்டை: ரோபோ சங்கர் படத்துடன் விழிப்புணர்வு போஸ்டர்

image

அரக்கோணம் பழனிபேட்டை மற்றும் சுவால்பேட்டை பகுதியில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் நகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். அதில் ரோபோ சங்கர் படத்துடன் ”என்ன தொட்டான், அவன் கெட்டான்” என்ற தலைப்புடன் எனக்கு மொழி, இனம், ஜாதி, நாடு, ஆண், பெண், இரவு, பகல் இவைகளை பிரித்துப் பார்க்க தெரியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!